Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 15 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மதுபோதையில் சாரதி அனுமதிபத்திரம் இன்றி வாகனங்களை செலுத்திய சாரதிகள் நால்வருக்கு 42,000 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், இன்று புதன்கிழமை (15) தீர்ப்பளித்தார் என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் வாகனம் செலுத்திய நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சாரதிகளுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதன் போது நீதவான் தலா 10,500 ரூபாய் அபராதம் விதித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago