Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
George / 2015 ஜூலை 16 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழிலிருந்து வெளிவரும் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்து நீதிகோரி ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன், புதன்கிழமை (15) உத்தரவிட்டார்.
குறித்த பத்திரிகையில் 2006 தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற கடத்தல், கொலைகள், கப்பம் பெற்றமையுடன் ஈ.பி.டி.பியினர் தொடர்புபட்டுள்ளனர் என்ற செய்தி 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த செய்தியினால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்து ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வழக்கு தொடுத்திருந்தார்.
குறித்த வழக்கு, புதன்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது டக்ளஸ் தேவானந்தா மன்றில் சாட்சியமளித்தார். சாட்சிய முடிவில் பத்திரிகையின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறுக்கு விசாரணையை செய்யவிருந்தார்.
எனினும் உடல் நலக்குறைவினால் தொடர்ந்தும் தனக்கு பதிலளிக்க முடியாது என்றும் மற்றுமொரு தினத்தை தரும்படி தனது சட்டத்தரணி ஊடாக டக்ளஸ் தேவானந்தா நீதிபதியிடம் கோரினார்.
அதற்கமைய குறித்த வழக்கின் குறுக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago