Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 20 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ். பருத்தித்துறை பகுதியிலிருந்து யாழ். நகருக்கு கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒரு தொகை கேரளா கஞ்சா பொதியினை கொண்டுவந்து யாழ். நகரில் விற்பனை செய்வதற்காக இருவர் கோட்டை முனியப்பர் கோவிலுக்கு அருகில் காத்து நிற்பதாக இரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் நின்ற இருவரையும் சோதனை செய்தபோது, அவர்களிடம் இருந்து கேரளா கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைதுசெய்ததுடன், அவர்களின் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதாகவும்; தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
31 minute ago
38 minute ago