2025 ஜூன் 25, புதன்கிழமை

போக்குவரத்து விதிகளை மீறிய சாரதிகள் மூவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூலை 21 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகள் மூவருக்கு 21,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

மதுபோதையில் சாரதி அனுமதிபத்திரம் இன்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு 11,500 ரூபாயும் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் செலுத்திய மல்லாகம் பகுதியினை சேர்ந்த ஓட்டுனருக்கு 2,000 ரூபாயும், மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய கட்டுவன் பகுதியினைச் சேர்ந்த ஓட்டுனருக்கு 7,500 ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளித்த நீதவான், சாரதி அனுமதிப் பத்திரத்தை 12 மாதங்கள் இரத்து செய்ய உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .