Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஜூலை 25 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆவரங்கால் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 5,000 ரூபாய் பணத்தை திருடிய 15 வயது சிறுனை புத்தூர் பகுதியில் உள்ள மதுபான நிலையத்தில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை (24) கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சிறுவன் இதற்கு முன்னரும் நான்கு தடவை திருட்டு குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சான்று பெற்ற பாடசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஆவரங்கால் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்து பணத்தினை திருடியமை தொடர்பில் வீட்டு உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் புத்தூர் பகுதியில் உள்ள மதுபான நிலையத்தில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது சிறுவனை கைது செய்திருந்தனர். அத்துடன் திருடிய பணத்தின் ஒரு தொகையையும் மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
51 minute ago
2 hours ago