2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'மருதப்புரவீகம்' பண்பாட்டு மலருக்கான ஆக்கங்கள் கோரல்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையினால் வெளியிடப்படுகின்ற 'மருதப்புரவீகம்' பண்பாட்டு மலருக்கான ஆக்கங்கள் துறைசார்ந்த புலமையாளர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன.

பண்பாடு, கலை, கலாசாரம், தமிழர் வரலாறு, தொன்மைச் சின்னங்கள் என்பவற்றை உள்ளடக்கிய சுய ஆக்கங்களான கட்டுரைகள் மற்றும் இலக்கிய ஆக்கங்களை, 4 பக்கங்களுக்கு மேற்படாத வகையில் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்பாக 'கலாசாரப் பேரவை, வலி. வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகம்' என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதெச செயலாளரும் கலாசாரப் பேரவையின் தலைவருமான க.ஸ்ரீமோகணன் அறிவித்துள்ளார்.

மேலும், வலி. வடக்கில் காணப்படும் வரலாற்று தொன்மை வாய்ந்த கட்டங்கள் இதுவரை பதிவுகள் மெற்கொள்ளப்படாது இருப்பின் பிரிவுக்கு சொந்தமான கிராம சேவையாளர்கள் மூலம் உறுதிப்படுத்தி கலாசாரப் பேரவைக்கு அறியத்தருமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .