Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் தான் ஊமையாக இருக்கப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பிரம்மகுமாரிகள் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக பேசப்படுகின்றதே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், 'நான் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க தற்போது தயாரில்லை. எதிர்வரும் தேர்தல் வரையில் நான் ஊமையாகவே இருக்கப்போகின்றேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago