Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியில் சென்ற இரண்டு பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 1 வருட சிறைத் தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருக்கும் 30 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கராசா கணேசராசா, புதன்கிழமை (12) தீர்ப்பளித்தார்.
நட்டஈடு கட்டத்தவறின் மேலும் 5 மாதங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என நீதவான் கூறினார்.
பருத்தித்துறை யாழ்ப்பாண வீதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களிடமிருந்த தங்கச் சங்கலி மற்றும் பணத்தை நபர் ஒருவர் வழிப்பறி செய்திருந்தார்.
விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார், வழிப்பறியில் ஈடுபட்ட நபரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் தவணை முறையில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
அல்வாய் வடக்கைச் சேர்ந்த நெல்சன் பெர்ணாண்டோ என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதவான், மேற்படி தண்டனையை வழங்கினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago