2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஈ.பி.டி.பி.யின் தேர்தல் பிரசாரத்தால் நோயாளிகள் பாதிக்கப்படவில்லை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடந்த 8ஆம் திகதி யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளிகள் பாதிக்கப்படவில்லையென யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவித்தாட்சி அதிகாரியுமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

பிரசாரக் கூட்டத்தின் போது வீதிகளில் கட்டப்பட்ட ஒலிபெருக்கியால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் பாதிப்படைவதாக 4 பேர் தொலைபேசி மூலம் தேர்தல் அலுவலகத்துக்கு முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அங்கு சென்று ஆராய்ந்தபோது, ஒலிபெருக்கிகள் மூலம் நோயாளிகளுக்கு பாதிப்புக்கள் இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டதாக மாவட்டச் செயலாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .