2025 ஜூன் 25, புதன்கிழமை

25 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 14 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.ஜெகநாதன்


ஏழாலை வடகிழக்கு சனசமூக நிலையத்தின் திவ்யா முன்பள்ளியில் கல்வி கற்கும் 25 மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் திங்கட்கிழமை (13) சனசமூக நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளன.

சனசமூக நிலைய செயலாளர் எஸ்.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுது கருவிகள், கொப்பிகள் உள்ளடங்கிய கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் தலைவரும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினருமாகிய சி.ஹரிகரனின் நிதியுதவியில் இக்கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி.பிரகாஷ், சென்ஜோன்ஸ் கல்லூரி ஆசிரியர் வி.குமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .