2025 ஜூன் 25, புதன்கிழமை

5 ஆவது நாளாக தொடரும் குடும்பநல பணியாளர்களின் போராட்டம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


பிராந்திய சுகாதாரப் பணிமனையின் கீழ் பணி புரியும் குடும்பநல பணியாளர்களின் போராட்டம் இன்று (23) 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
குடும்பநல பணியாளர்கள் நிரந்தர நியமனம் கோரி கடந்த வியாழக்கிழமை (19) முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலிரு தினங்களும் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையின் முன்னால்; நடைபெற்ற இந்தப் போராட்டம், சனி, ஞாயிறு தினங்களில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனை விடுமுறை ஆகையினால், தங்கள் தங்கள் பிராந்திய சுகாதார நிலையங்களின் முன்னால் குடும்பநல பணியாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

பல வருடங்களாக 6 ஆயிரம் ரூபா வேதனத்தில் கடமையாற்றி வரும் இந்த குடும்பநல பணியாளர்கள் தங்களின் நிரந்தர நியமனம் கோரியே இந்தப் போராட்;டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .