2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், சூரியவௌ ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த விபத்துக்களில், சனிக்கிழமை (03) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த வானுடன் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர், கட்டுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். வானின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதலங்கலயிலிருந்து சூரியவௌ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் உழவியந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், 45 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.  விபத்துடன் தொடர்புடைய உழவியந்திரத்தின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X