Editorial / 2020 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த யுவதியை, தம்புத்தேகம பொலிஸார் நேற்று (26) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நொச்சியாகம, ஒலுவௌ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே மன விரக்த்தியில் தற்கொலை செய்யும் நோக்கில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.
இதன்போது, அங்கு கடமையில் இருந்த தம்புத்தேகம பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உடனடியாக செயற்பட்டு, நீர்த்தேக்கத்தில் குதித்த யுவதியை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட யுவதி, மேலதிக சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி தற்கொலை செய்ய முயற்சித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தம்புத்தேகம பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
39 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago