2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

வலி நிவாரணி போதையாகிறது?

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாணத்தில் புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரணி மாத்திரைகளை, ஒரு சிலர் போதைப்பொருளாகப் பயன்படுத்தி வருவதாக ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் தேசிய மருந்து ஒளடத கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த நிவாரணி மருந்துகளை அரச மருந்தகங்களில் மாத்திரம் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில் எவ்வாறு அது மக்களிடம் பரவ ஆரம்பித்;தது என்பது தொடர்பில் சிக்கல் உள்ளதாக ஒளடத கட்டுப்பாட்டுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

சிலாபத்தில் பல இடங்களில் உள்ளவர்கள், இம்மாத்திரைக்கு எவ்வாறு அடிமையாகியுள்ளனர் என்பது குறித்து கண்டறியப்படவில்லை.

பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை இம்மருந்துக்கு அடிமையாகியுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X