Princiya Dixci / 2016 நவம்பர் 09 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
புத்தளம், கல்பிட்டி சிங்ஹகுடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமான முறையில், சுமார் 5 கிலோகிராம் எடையுடைய 'சிங்கி' வகை ஏழு இறால்களைப் பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த மீனவர் ஒருவரை, புத்தளம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (08) கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இறால்களைப் பிடித்துப் பிரபல ஹொட்டல்களுக்கு விற்பனை செய்து வருவதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் கடற்றொழில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago