2025 மே 26, திங்கட்கிழமை

புத்தளம் நாட்சந்தை ரூ.25 மில்லியன் செலவில் புனர்நிர்மாணம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 18 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் நகரில் இயங்கி வந்த நாட்சந்தை சுமார் 25 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளதாக புத்தளம் தொகுதி சுதந்திர கட்சி அமைப்பாளரும் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

இதற்கான நிதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றின் மூலம் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது தினச்சந்தை வழமையான இடத்திலிருந்து தற்காலிகமாக மற்றுமொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதுடன் பழைய இடத்திலிருந்த கட்டிடங்கள் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X