2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் 30000 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

Kogilavani   / 2012 ஜனவரி 25 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் குடிநீர் வசதிகளற்ற 30000 குடும்பங்களுக்கு குடிநீர்; வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக வடமத்திய மாகாண நீர்வழங்கல் சபையின் பொது முகாமையாளர் எல். எல்.ஏ. பீரிஸ் தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனடிப்படையில், அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின்; கீழ் 50 மில்லின் ரூபா செலவில் 5000 குடும்பங்களுக்கும், தந்திரிமலை புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5000 குடும்பங்களுக்கும், ஒயாமடுவ குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 3000 குடும்பங்களுக்கும், அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் மேற்கொள்ளப்படவுள்ள புதிய குடிநீர் திட்டங்கள் மற்றும் குழாய்க் கிணறுகள் ஊடாக 15000 குடும்பங்களுக்கும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X