2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பசுமாடுகளுக்கு 4000 ஏக்கர் புற்தரை காணி

Super User   / 2011 மார்ச் 10 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

பதவிய பகுதியில் கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்ளும் புற்தரைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அப்பகுதியில் 4000 ஏக்கர் காணிகளை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் கே.எச்.நந்தசேன தெரிவித்தார்.

இப்பகுதியில் பசுமாடுகளை வளர்ப்போர் தமது கால்நடைகளை மேயவிடுவதற்காக போதுமான புற்தரைகளின்றி சிரமத்தை எதிர்நோக்கினர்.  இதனைத் தீர்த்து வைக்கும் முகமாகவே மஹாவலி அதிகாரசபையுடன் இணைந்து 2000 ஏக்கர் காணி; பெறப்பட்டுள்ளதோடு மேலும் 2000 ஏக்கர் காணி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் இவ்வாறான புற்தரைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .