2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வாகன கடத்தலில் ஈடுபட்ட கும்பலுக்கு கடூழிய சிறைத்தண்டனை

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஸி.சபூர்தீன்)

மூன்று இலட்சத்து தொன்னூறாயிரம் ரூபா பெருமதி வாய்ந்த முற்சக்கர வண்டி உட்பட பல உபகரணங்களையும் திருடியமை மற்றும் நபர் ஒருவரை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு ஒன்பது மாதகால கடூழிய சிறைத்தண்டனையை விதித்து கெகிராவ நீதவான் வினித் விஜேசகர நேற்று தீர்ப்பளித்தார்.

இதற்கு மேலதிகமாக ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரத்து ஐநூறு ரூபா வீதம் அபராதமும் விதித்தார். திறப்பனை 29ஆம் வீடமைப்பு பிரிவில் வசித்து வரும் நான்கு பேருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .