2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சடலத்துடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 மார்ச் 14 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

சிலாபம் - ஆனமடுவ வீதியில் திகன்வௌ பிரதேசவாசிகள் சிலர் இன்று திங்கட்கிழமை மாலை சடலமொன்றை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவமொன்றில் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தே இவர்கள் ஆர்ப்பாட்டதை நடத்தினர்.

விபத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலாபம் - ஆனமடுவ பிரதான வீதியில் டயர்களை எரித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, குறித்த விபத்திற்கு காரணமானவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .