Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 21 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
நிகவெரட்டி நகரில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிகவெரட்டி நகரிலுள்ள வீதிக் கடவை ஒன்றை கடக்க முயன்ற போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்த நபர் வீதிக்கடவையினூடாக வீதியைக் கடக்க முற்பட்ட போது புத்தளம் பக்கமிருந்து குருநாகல் நோக்கி வந்து கொண்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியுள்ளார். இதன் போது உயிரிழந்த நபர் வீதியின் மத்திக்கு வீசப்பட்டதுடன், அப்போது குருநாகல் பக்கமிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற பயணிகள் பஸ் அவர் மீது ஏறியுள்ளது.
இதன் பின்னர் அவர் உடனடியாக நிக்கவெரட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளார். நிகவெரட்டி கல்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஜயகொடி ஆராச்சிகே விஜேரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவ்விபத்துடன் தொடர்புடைய லொறி மற்றும் பஸ் சாரதிகள் இருவரும் நிகவெரட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று அவர்களை நிசவெரட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை நிகவெரட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
25 May 2025