Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 26 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை வீழ்ச்சியினால் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதோடு அநுராதபுரம் அழுத்கம பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் மல்வத்து ஓயா ஆற்றின் பாலத்திற்கு மேலாக சுமார் ஐந்து அடி நீர் பாய்கிறது. இதன்காரணமாக அநுராதபுரம் - அழுத்கம பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அழுத்கம, கம்பிரிகஸ்வௌ, அஸறிகம, கிவ்லேகட உட்பட இருபதுக்கு மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
25 May 2025