2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நீரில் மூழ்கி இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 11 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துனுகல குளத்தில் நேற்று சனிக்கிழமை மாலை குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

நாவுல பகுதியைச் சேர்ந்த கே.எம்.ருவன்குமார (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு  உயிரிழந்தவராவார்.

கெக்கிராவ பகுதியிலமைந்துள்ள தமது பெரியம்மாவின் வீட்டுக்கு நண்பர்களுடன் வந்துள்ள இவர் குளத்தில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி மரணடைந்துள்ளார்.
 
இவரை காப்பாற்ற முற்பட்டபோதிலும் அது பலனளிக்கவில்லையென பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X