2025 மே 14, புதன்கிழமை

இறால் பண்ணையில் இயந்திரங்களை திருடிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்,எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையொன்றிலிருந்து விலையுயர்ந்த 20 இயந்திரங்களை திருடியதாகக் கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து வெளிநாட்டுக் கைக்குண்டொன்றுடனும் முச்சக்கரவண்டியொன்றுடனும் திருடப்பட்ட 08 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களையும் 12 காற்றாடி இயந்திரங்களையும் முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள இயந்திரங்களின் பெறுமதி சுமார் 15 இலட்சம் ரூபாவெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நீண்ட நாட்களாக முந்தல் பிரதேசத்தில் பாரிய திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .