2025 மே 10, சனிக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 16 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

14 வயதுடைய சிறுமி ஒருவரை  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு, மறைந்திருந்ததாகக் கூறப்படும் 28 வயதான  இளைஞர் ஒருவரை  முந்தல் பொலிஸார் வியாழக்கிழமை மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிறுமி கடந்த 14ஆம் திகதி துஷ்பிரயோகத்துக்கு  உள்ளாக்கப்பட்டதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த  முறைப்பாட்டின் அடிப்படையில்  முந்தல் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் புத்தளம் பொலிஸ் பிரிவிற்குள் நடைபெற்றுள்ளதால், புத்தளம் பொலிஸாரிடம் சந்தேக நபரை முந்தல் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரிடம் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X