2025 மே 10, சனிக்கிழமை

நிதி நிறுவன கொள்ளை; மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளத்திலுள்ள நிதி நிறுவனமொன்றிலிருந்து 2.8 மில்லியன் ரூபா திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூவரை  இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஒருவருடன்; மேலும் இருவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிதி நிறுவனத்திலிருந்து  2.8 மில்லியன் ரூபா திருட்டுப் போயுள்ளதாக நிதி நிறுவனத்தின் முகாமையாளர்; நேற்றுமுன்தினம்  புதன்கிழமை புத்தளம்  பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இச்சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X