2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 14 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ், புத்தளம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சுமார் 250 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் புத்தளம் நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் வேண்டுகோளின் பேரில், தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சீ.பீ.ரத்நாயகவின் நிதி ஒதுக்கீட்டில் இத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

;இந்நிகழ்வில் வடமேல் மாகான சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன உட்பட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .