2025 மே 10, சனிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 20 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்    


புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் சாகிறா தேசிய பாடசாலையின் மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (20) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

அரசின் புதிய, ஆயிரம் இடை நிலை பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில்  இந்த பீடமானது நிர்மாணிக்கப்படவுள்ளது.

கல்லூரி அதிபர் எஸ்.ஏ.சி. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புத்தளம் நகர முதல்வரும், இலங்கை சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் பீடத்துக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், புத்தளம் வலய கல்வி பணிமனையின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் நியூட்டன் ஸ்ரீமான்ன, கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.சி.எம்.மஹ்ரூப், உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அபுல்ஹூதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.     





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X