2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் பலி

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம், அநுராதபுரம் வீதி, சிரம்பியடி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(27) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சீமெந்து லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலே  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முல்லைத்தீவில் பணியாற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே பலியாகியுள்ளார். இவர், விபத்தில் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த  பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X