2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கஞ்சாவை  பல இடங்களுக்கும் கொண்டுசென்று விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் இருவரை மதுரங்குளி, கரிக்கட்டை வஜிரவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை  கைதுசெய்ததாக புத்தளம் குற்ற ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

மொனராகலை மற்றும்  கட்டுநாயக்கவைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர்களிடமிருந்து  இரண்டு கிலோ கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள் கஞ்சாவை மொத்தமாக பஸ்களில் கொண்டுவந்து சில்லறையாக விற்பனை செய்பவர்களிடம் விநியோகித்து வந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன்  இந்தச் சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முகமாக  முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X