2025 மே 09, வெள்ளிக்கிழமை

அ'புர விபத்தில் ஒருவர் பலி: ஐவர் காயம்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம்- பாதெனிய வீதியில் கென்னபுகுனு எனுமிடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் வங்கி நிறைவேற்று அதிகாரி பயணித்த ஜீப் வண்டி, டிரக்டருடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் டிரக்டரில் பயணித்த இளைஞனே பலியாகியுள்ளார். காயமடைந்தவர்கள் வங்கி முக்கியஸ்தர்கள் என்று தெரிவித்த பாதெனிய பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X