2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஹெரோயினுடன் பெண் கைது

Gavitha   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

80 மில்லி கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணொருவரை செவ்வாய்க்கிழமை (07) கைது செய்துள்ளதாக சிலாபம் பிரிவின் போதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபரான பெண்ணிடம் ஹெரோயின் உள்ளதாகக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த பெண்ணின் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த 80 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வென்னப்புவ பொலிஸார், சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X