2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் ஐ.தே.க வின் மக்கள் தொடர்பு காரியாலயம் திறந்து வைப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

  
-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சி காரியாலயம் புத்தளம் மஸ்ஜித் வீதியில் சனிக்கிழமை (11) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் தொகுதிக்கான ஐ.தே.கட்சி அமைப்பாளராக புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீண்ட கால உறுப்பினருமான எம்.என்.எம். நஸ்மி நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் தொடர்பு அலுவல்களுக்காக இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழா நிகழ்வில், புத்தளம் தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளர்  எம்.என்.எம். நஸ்மி, நாடாளுமன்ற  உறுப்பினர்களான காமினி  ஜயவிக்கிரம பெரேரா, பாலித ரங்கே பண்டார, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான சித்ரால் பெர்னாண்டோ, விக்டர் அப்புஹாமி, முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ், புத்தளம் நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஏ.ஓ. அலிகான் உள்ளிட்ட நகர,பிரதேச சபை உறுப்பினர்கள், ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.  




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X