S.Sekar / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021 ஜனவரி மாதம் சர்வதேச விமான நிலையங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கு உயிரியல்-குமிழ் முறையின் கீழ் 1635 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர் என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஜனவரி மாதத்தில் இலங்கை 228,434 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் இலங்கையின் விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகள் வருகையை தவிர்க்கும் வகையில் மூடப்பட்டன.
2021 ஜனவரி மாதத்தில் சமூகமளித்திருந்த சுற்றுலாப் பயணிகளில் உக்ரேன், பெலரஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்கியிருந்தனர்.
நெதர்லாந்து, கனடா, இந்தியா, மாலைதீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைக்கு சமூகமளித்திருந்தனர்.
ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, 2021 ஜனவரி 21 ஆம் திகதி சர்வதேச விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டிருந்தன.
4 minute ago
12 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
17 minute ago
1 hours ago