2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 26 வீதத்தால் அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 26.1 வீதத்தால் அதிகரித்துக் காணப்பட்டதாகவும், இந்தியா, ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் ஓகஸ்ட் மாதத்தில் வருகை தந்திருந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
 
ஓகஸ்ட் மாதம் வரையிலான முதல் 8 மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.3 வீதத்தால் அதிகரித்து 711,446 ஆக பதிவாகியிருந்து. 
 
இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 29.2 வீதத்தால் அதிகரித்து 14528 ஆக பதிவாகியிருந்தது. இரண்டாவது மாதமாக இந்த அதிகரிப்பு பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .