2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பங்குச்சந்தை 0.33 வீதத்தால் சரிவு; ரூபாவின் பெறுமதியும் குறைவு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்கள் நேற்றைய தினம் 0.33 வீதத்தால் சரிவடைந்திருந்தது. வெளிநாட்டவர்கள் பெருமளவு பங்கு விற்பனையில் அதிகளவு ஆர்வம் செலுத்தியிருந்தமையின் காரணமாக இந்த பெறுமதி வீழ்ச்சியை அவதானிக்க முடிந்தது. 
 
திங்கட்கிழமை பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்கள் நிறைவடையும் பொழுது அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 19.78 புள்ளிகளால் சரிவடைந்து 5928.97 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. S&P SL20 சுட்டி 18.72 புள்ளிகளால் சரிவடைந்து 3261.76 புள்ளிகளாக பதிவாகியிருந்தது.
 
மொத்தப்புரள்வு பெறுமதியாக 372.54 மில்லியன் ரூபா பதிவாகியிருந்ததுடன், வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்குவிற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 130.95-131.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .