2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ஹட்ச் நிறுவனத்திற்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 18 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக திருகுமார் நடராசா நியமிக்கப்பட்டுள்ளதாக ஹட்சிசன் ஏசியா டெலிகொமியுனிகேஷன்ஸ் லிமிடெட், ஹொங்கொங் அறிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதென ஹட்ச் அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்புகள் துறையில் சுமார் 20 வருட காலம் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ள திரு, இதில் 14 வருடங்களை ஹட்சிசன் டெலிகொம், ஹொங்கொங் அலுவலகத்திலும், 4 வருடங்களை சிங்கப்பூர் டெலிகொம் நிறுவனத்திலும், அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஜிஎஸ்எம் வலையமைப்பை வெற்றிகரமாக மத்திய ஆபிரிக்க நாடுகளில் செயற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இலங்கையின் தொலைத்தொடர்புகள் துறையில் முன்னர் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ள இவர், 2002 – 2007 வரையிலான காலப்பகுதியில் 5 ஆண்டுகள் வரையில் இலங்கையின் ஹட்ச் நிறுவனத்தில் பணியாற்றியிருந்ததுடன், 2004ஆம் ஆண்டில் ஜிஎஸ்எம் சேவைகளை இலங்கையில் ஆரம்பித்திருந்தார். இக்கால கட்டத்தில் இவரால் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளின் மூலமாக, ஹட்ச் பெரிதும் மக்களால் அதிகம் பேசப்பட்ட நாமமாக திகழ்ந்தது. இதனை தொடர்ந்து இவர் ஹட்சிசன் டெலிகொம் வியட்நாம் நாட்டின் செயற்பாடுகளை மேற்கொள்ள சென்றிருந்தார். 

இவர் இலத்திரனியல் பொறியியல் துறையில் பிரித்தானியாவின் லொஃப்புரோ பல்கலைக்கழகத்தில் பட்டத்தை பெற்றுள்ளதுடன், லண்டன் இம்பிரியல் கல்லூரி மற்றும் பேர்மிங்கம் அஸ்டன் பல்கலைக்கழகத்தில் இரு மாஸ்டர்ஸ் சான்றுகளை முகாமைத்துவ விஞ்ஞானம் மற்றும் தொலைத்தொடர்பாடல் சேவைகள் போன்ற துறைகளில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிய மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களில் சுமார் 20 வருட காலம் பணியாற்றிய அனுபவத்தை திருக்குமார் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தனது நியமனம் குறித்து திருகுமார் கருத்து தெரிவிக்கையில், 'ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் மீண்டும் இணைவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் மீண்டுமொரு தடவை புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை நான் மேற்பார்வை செய்யவுள்ளேன். இலங்கையில் மிகப்பெரும் 3G வலையமைப்பில் நாட்டின் 25 மாவட்டங்களையும் தொடர்புபடுத்தும் வகையில் தனது முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையை சேர்ந்த அனைவருக்கும் குறைந்த விலையில் வேகமான இணைய சேவைகளை வழங்க நான் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .