2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கான சலுகை இலங்கைக்கு கிடையாது

A.P.Mathan   / 2013 ஜூன் 26 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானிலிருந்து மசகு எண்ணெய்யை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடை தொடர்வதற்கான சாத்தியக்கூறு அதிகம் காணப்படுவதாக அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
 
ஈரானிலிருந்து சலுகை அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லையில் குறித்த சலுகையை இலங்கை பயன்படுத்தாமையின் காரணமாகவே இந்த சலுகை தொடர்ந்து பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன இணைந்து மேற்கொண்டிருந்த பொருளாதார தடை காரணமாக, அந்நாட்டிலிருந்தான எண்ணெய் இறக்குமதி தடைப்பட்டது. இந்த தடை காரணமாக, அந்நாட்டிலிருந்து கப்பல்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் போன்றன தமது வியாபாரத்தை தொடர மறுப்பு தெரிவித்திருந்தன. இதன் காரணமாக கடந்த ஜூன் மாதத்துக்கு பின்னர், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்ள முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக தற்போது தொடர்ந்து ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .