2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பங்குச்சந்தை சரிவு; ரூபா பெறுமதி உறுதி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கட்கிழமை கொழும்பு பங்குச்சந்தையின் பிரதான சுட்டி சரிவடைந்த நிலையில் நிறைவடைந்திருந்ததுடன், ரூபாவின் பெறுமதி உறுதியடைந்து காணப்பட்டதாக சந்தை முகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
 
அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 5.30 புள்ளிகள் சரிவடைந்து 5803.32 ஆக பதிவாகியிருந்தது. S&P SL 20 சுட்டெண் 5.58 புள்ளிகள்  அதிகரித்து 3215.88 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. 
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதி 750.85 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. கார்சன்ஸ் கம்பர்பெட்ச், எயிட்கன் ஸ்பென்ஸ், நெஸ்லே லங்கா போன்ற பங்குகளின் பெறுமதிகள் உயர்வடைந்திருந்தன. 
 
நாணயமாற்று விகிதங்களை பொறுத்தமட்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 132.00 ஆக காணப்பட்டதாக நாணயமாற்று முகவர்கள் தெரிவித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .