Gavitha / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அப்பியாசக் கொப்பிகளில் முன்னணி வகிக்கும் வர்த்தக நாமமான ProMate, சர்வதேச நியமங்களுக்கமைய உற்பத்திச் செய்யப்படுகின்றன. புதிய தவணைக்காகப் பாடசாலைகள் மீள திறக்கப்படும் காலப்பகுதியில் புதிய விற்பனையில் சாதனையை ProMate படைத்திருந்ததாக, Printxcel நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி நலிந்த ஜயமான்ன தெரிவித்தார். Rathna பிரசுரங்களின் பரந்த அறிமுகங்களில் பிந்திய வெளியீடாக, ProMate அமைந்துள்ளது. புத்தகங்கள் வெளியீட்டில் 50 ஆண்டுகளுக்கு அதிகமாக ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.புதிய விற்பனை பெறுமதியை எய்தியுள்ளமை தொடர்பில், ProMate அப்பியாசக் கொப்பிகளின் வெளியீட்டு நிறுவனமான, Printxcelஇன் பிரதம செயற்பாட்டு அதிகாரி நளிந்த ஜயமான்ன தொடர்ந்து தெரிவிக்கையில்,
“சந்தையில் ProMate அப்பியாசக் கொப்பிகளின் அறிமுகத்துடன், பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிகவும் குறுகிய காலப்பகுதியில் இந்தத் தயாரிப்புகள் மிகவும் பிரபல்யமடைந்துள்ளன. ProMate வர்த்தக நாமம் பரந்தளவில் அதிகளவு வரவேற்பைப் பெறுவதற்கு பிரதான காரணியாக, உயர்ந்த தரம் மற்றும் கண்கவர் உயர் அலங்கார வடிவமைப்பு அமைந்துள்ளது. இந்தப் பிரத்தியேகமான உள்ளம்சங்கள் காரணமாக, எம்மால் புதிய விற்பனை சாதனைப் பெறுமதியை எய்தக்கூடியதாக இருந்தது.
தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் “ProMate அலை” ஒன்று உருவாகியுள்ளது.முதலில் நான் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு ProMate மீது நம்பிக்கை வைத்துள்ளமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாவதாக, மாணவர்களுக்கு இலகுவாக ProMate தயாரிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு, வழிவகுத்த நாடு முழுவதையும் சேர்ந்த எமது விநியோகஸ்த்தர்களுக்கும், புத்தகசாலை உரிமையாளர்களுக்கும் மற்றும் ProMate விற்பனை அணிக்கும் Printxcel நிர்வாகத்தினர் மற்றும் சகல ஊழியர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
12 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago