2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அக்கராயன் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயனில் அக்கராயன் ஆற்றுப்பகுதியிலும் மணியங்குளத்தின் பின் பகுதியிலும் மணல் அகழ்வு நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது, மணல் அகழ்வில் ஈடுபடுவோர் மீது சட்டநடவடிக்கை எடுப்பது ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.

எனினும், அக்கராயனில் பொலிஸ் நிலையம் உள்ள போதிலும் பகல்வேளையில் கூட மணல் அகழ்வு அக்கராயன் ஆற்றுப்பகுதியில் நடைபெறுகின்றது. 

பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே இச்சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக பொதுமக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

அக்கராயன் ஆற்றுப்பகுதியில் பகல்வேளையில் அகழப்படும் மண் டிப்பர்களில் ஏற்றி வெளியிடங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்றது.  

அக்கராயனில் வீட்டுத்திட்டங்களுக்காக மணலை பெற்றுக்கொள்வதில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 

இந்நிலையிலேயே அக்கராயன் ஆற்றுப்பகுதியிலிருந்து நாள்தோறும் மணல் களவாகக் கொண்டுசெல்லப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது பெரியகுளமாகிய அக்கராயன் குளத்தின் கீழ் களவாக மணல் கொண்டு செல்வதை அதிகாரிகள் தடுக்கவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X