Editorial / 2018 நவம்பர் 19 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளைப்பிரதேசத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெண்கள் அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பாக முள்ளியவளை, தண்ணீரூற்று, கணுக்கேணி போன்ற கிராமங்களில் மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு மீற்றர் வட்டிக்கு பணத்தைப் பெற்றுக்கொண்ட 2 நபர்கள் இந்த மாதம் தமது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்கள்.
மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்றும் இதனை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் வருமான வரித்திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பெண்கள் அமைப்பு கோரியுள்ளது.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026