Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 05 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
'கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து செயற்பாடுகளிலும் இராணுவத் தலையீடுகள் காணப்படுகின்றன. இராணுவத்தினர் இதனைக் கைவிட்டு அனைத்துச் செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். இதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட கால்நடை அபிவிருத்தி, ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று புதன்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய மாதிரிகளின் ஆராய்ச்சி மற்றும் கால்நடைகளின் ஆராய்ச்சி என்பவற்றை மேற்கொள்ளக்கூடிய வினைத்திறன் மிக்க வட்டக்கச்சி ஒருங்கிணைந்த விவசாய பண்ணையை சிவில் திணைக்களம் சுவீகரித்து வைத்துள்ளது. சிவில் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் ஒரு இராணுவக் கட்டமைப்பு ஆகும். இதனை விடுவிக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
'சிவில் திணைக்களங்கள் ஊடாக நடத்தப்படும் முன்பள்ளிகளில் இராணுவமயமாக்கல் உள்ளது. அங்கு கற்கும் சிறார்களுக்கு இராணுவச் சீருடை அணிவிக்கப்படுகின்றது. இது இராணுவமயமாக்கல் செயலாகும்' என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago