2025 ஜூன் 09, திங்கட்கிழமை

‘அறுவடை முடிந்த பின்னரே அதிகாரிகள் வந்தனர்’

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

அறுவடை முடிந்த பின்தான் அழிவுகளை மதிப்பீடு செய்ய அதிகாரிகள் வந்ததாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விவசாயிகள் நேரடியாகவே தெரிவித்தனர்.

அண்மையில் நடைபெற்ற முல்லைத்தீவு - வவுனிக்குளத்தின் சிறுபோக நெற்செய்கைக் கூட்டத்தின் போதே, விவசாயிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

கடும் மழை பெய்து, வயல் நிலங்களை வெள்ளம் மூடி பாய்ந்த வேளை அழிவுகளை மதிப்பீடு செய்ய வருகை தராத அதிகாரிகள், எஞ்சிய பயிர்களை உணவுத் தேவைக்காக அறுவடை செய்த பின்னர் மதிப்பீடு செய்ய வந்ததாகவும் அவ்வாறு வந்தவர்கள் அழிவுகள் ஏற்படவில்லை என்ற காரணங்களை கூறி அழிவுகளை முறையாகப் பதிவு செய்யவில்லையெனவும், விவசாயிகள் தெரிவித்தனர்.

பல தடவைகள் அழிவுகள் ஏற்பட்டுள்ளது. வந்து பாருங்கள் என அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும், உரிய நேரத்தில் வருகை தராத அதிகாரிகள் நீண்ட நாள்களுக்குப் பின்னர் வந்து விட்டு ஒழுங்காக அழிவுகளை மதிப்பீடு செய்யவில்லை எனவும் செயலாளரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .