2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அறிவியல் நகரில் உணவுக் களஞ்சியம் அமைக்கப்படவுள்ளது

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் 300 மில்லியன் ரூபாய் செலவில் பாரிய உணவுக் களஞ்சியம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் இன்று வியாழக்கிழமை (03) தெரிவித்தார்.

களஞ்சியம் அமைப்பதற்கான நிதியாக நிதியமைச்சரிடம் இருந்து 300 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், களஞ்சியம் அமைப்பதற்கான காணியும் அளவீடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கை பண்ணப்படும் நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

களஞ்சிய வசதிகள் இல்லாமையால் நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்ய முடியாதுள்ளது. இந்த உணவுக் களஞ்சியம் அமைக்கப்பட்டால் நெல்லை விவசாயிகளிடமிருந்து பிரச்சினையின்றி கொள்முதல் செய்ய முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X