2025 மே 01, வியாழக்கிழமை

ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வவுனியா வடக்கு - நெடுங்கேணி கல்வி வலயத்துக்குட்பட்ட அதிபர் ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு - புளியங்குளம் இந்துக் கல்லுரியில் கடந்த 7, 8ஆம் திகதிகளில்  276 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், 76 பேருக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஆசிரியரொருவருக்கு  தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் குறித்த ஆசிரியருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய 200 பேருக்கான முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லையென. சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .