2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆயரை பார்க்க வருவதை சற்று தவிர்க்கவும்: குரு முதல்வர்.

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் ஆயர் இல்லத்தில் ஓய்வெடுத்துகொண்டிருக்கின்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை பார்க்கவருவதை தற்போதைக்கு தவிர்க்கவும் என்று  மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அ.விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில்; கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை,  நாடு திரும்பியுள்ள நிலையில் மன்னார் ஆயர் இல்லத்தில் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.  

மன்னார் ஆயரின் உடல்நலம் குறித்து அவர், தெரிவிக்கையில்,

மன்னார் ஆயர் இல்லத்திலேயே ஆயர்; தற்போது தங்கியுள்ளார்.அவர் நல்ல சுகத்தோடு உள்ளதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இருந்த போதிலும்  தனது பணியினை உடனடியாக செய்யக்கூடிய நிலையில் நாங்கள் அவரை விடவில்லை. தற்போது அவருக்கு ஓய்வு தேவை. செபத்திலும்,ஓய்விலும் குறிப்பாக பத்திரிகைகள் படித்தல்,கடிதங்களை பார்த்தல் என்பவற்றில் ஆயர்;  தற்போது கூடுதலாக ஈடுபட்டு வருகின்றார்.

எனினும், ஆயருக்கு கூடுதலான ஓய்வு தேவைப்படுகின்றது. அதிகமானவர்கள் ஆயரை பார்க்க ஆவலோடு இருக்கின்றார்கள்.

ஆனால்,  எல்லோரும் அவரை பார்ப்பது என்பது முடியாத காரியம்.அது ஆயரின் உடல் நலத்துக்கு உகந்ததாக இல்லை.
ஆனால், அதிகளவானவர்கள் வந்து ஆயர் அவர்களை பார்க்க வேண்டும் என்று கேட்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் என்றார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X