2025 ஜூலை 02, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் அறுவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 நவம்பர் 01 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டஇந்திய மீனவர்கள் ஐவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, கைதுசெய்யப்பட்ட 15 வயதான சிறுவனை மன்னார் சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கமாறும் நேற்று ஞாயிற்றுக்கிழமை(01) உத்தரவிட்டார்.

படகு ஒன்றில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை கடற்படையினர்  நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். அதல் ஒருவன் 16 வயதுடைய சிறுவனாவான்.

கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட குறித்த 06 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதன் போது குறித்த மீனவர்களை இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .