Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவிலுள்ள, இரணைதீவில் மக்களின் காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் அதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை அதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.
மிகவும் கடல் வளம் கொண்ட பிரதேசமான இரணைதீவுப் பிரதேசம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் தங்கி உள்ளனர். 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் யுத்தம் காரணமாக வெளியேறிய மக்கள் இரணைமாதா நகரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி, இவ்வாண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் தரப்பினரது வாக்குறுதிகளை நம்பாமல் தமது போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் தலைமையில் இவ்வாண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி அவற்றை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்ததையடுத்து கடந்த மாதம் பிரதேச செயலர் தலைமையிலான குழுவொன்று இரணைதீவுக்குச்சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு வந்தனர்.
இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், குறித்த பகுதியில் மக்கள் குடியிருந்ததாகக் கூறப்படும் பகுதிகள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதி பாரிய பற்றை காடுகளாக காணப்படுவதால் அதனை துப்பரவு செய்தே அளவீட்டு நடவடிக்கையை முன்னெடுக்கலாம் எனவும் குறிப்பிட்டதோடு, அதற்கான அனுமதியை பாதுகாப்ப அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இரணைதீவுக்குச்சென்று நிலஅளவை செய்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இம்மாதம் ஒன்பதாம் திகதி கோரப்பட்ட போதும், அதற்கான அனுமதி வழங்கப்படுவதில் இழுபறிநிலை காணப்பட்டது.
இச்சூழலிலேயே, கடந்த வியாழக்கிழமை அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் நில அளவை திணைக்களத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் பூநகரி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, இரணைதீவில் நில அளவீட்டு பணிகள் இன்றுஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆறு நாட்கள் தங்கியிருந்து முதல் கட்ட அளவீட்டுப் பணிகள் இடம்பெறும் எனவும் பின்னர் மற்றுமொரு திகதியில் இரண்டாம் கட்ட பணிகள் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார். அளவீட்டு பணிகள் முடிவடைந்ததும் அது தொடர்பான அறிக்கை மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
2 hours ago
2 hours ago