2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இரணைதீவுக்கு செல்லவுள்ள இணைத்தலைவர்கள்

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்து இரணைமாதா நகரில் வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடி, அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் ஆகியோர் அங்கு செல்வதற்கான தீர்மானமொன்று, பூநகரிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமைகளில் பூநகரிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை (02) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அப்பிரதேச மக்கள்,

'இரணைதீவில் தற்போது கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர். கடற்படையினருக்கு மத்தியில் மீள்குடியேறுவதற்கு அச்சமாகவுள்ளது' என்றனர். இந்நிலையிலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.

1990ஆம் ஆண்டில், இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தற்போது முழங்காவில் இரணைமாதா நகரில் தங்கியுள்ளனர்.

இரணைதீவில் மக்களை மீள்குடியேற்றுவதற்காக 336 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X